திங்கள், ஏப்ரல் 16, 2012

.


மோடியின் ஊழல் மலிந்த நிர்வாகம்.

மோடியின் அரசாங்கம் ஒழுங்காக நடைபெறவில்லை: கணக்குத் தணிக்கை அறிக்கை குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 1, 2012, 10:14 [IST]

அகமதாபாத்: முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குத் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 25 நிறுவனங்களில், 22 நிறுவனங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 நிறுவனங்களின் கணக்குகள் கடந்த 4 ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.
அரசின் பட்ஜெட்டில் 19 இனங்களில் ரூ.1,444 கோடி சேமிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரூ.2,045 கோடி செலவிடப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 601 கோடி கூடுதலாகத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது அரசின் பட்ஜெட் தொடர்பான செயல்பாடு சரியில்லை என்பதையே காட்டுகிறது.

முறையான விளையாட்டுக் கொள்கை வகுக்கப்படவில்லை. பயிற்சியாளர்கள் அனைவரும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான விளையாட்டு விடுதிகள் செயல்பாட்டில் இல்லை.

குடிநீர்க் கொள்கையும் சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம் எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. சபர்மதி ஆற்று நீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை முறையாகக் கண்காணிக்கவில்லை.

நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்களை தேவைப்படும் பயனாளிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கவில்லை.

நிர்வாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங்கள் தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட ரூ.71.8 கோடியை வருவாய்த்துறை பயன்படுத்தவே இல்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/2012/04/01/india-cag-raps-gujarat-failure-comply-with-rules-procedures-aid0216.html

முரண் பாட்டுகளின் மூட்டை மோடி

மேற்காணும் குஜராத் அரசின் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) யின் அறிக்கையில் நரபலி மோடியின் ஊழல் மலிந்த நிர்வாகத்தை, சீர்கெட்ட நிர்வாகத்தை பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டி இருக்கிறார் அதற்கு நேர் மாறாக அகில இந்திய பா.ஜ.க வின் தமிழக ஊதுகுழலாக செயல்படும் சோ.ராமசாமி கடந்த ஆண்டு நடத்திய மாடு மேயக் கூட மறுக்கும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் மோடி கலந்து கொண்ட பொழுது குஜராத்தின் வளர்ச்சிப் பணிகளை(?) சாதனைகளை(?) நரபலி மோடிப் பட்டியலிட்டதை அப்படியே கீழேத் தருகிறோம்.


மோடி பேசியதாவது. 'நான்-சோவின் ரசிகன்' என்றார். நாட்டில்-நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது- தமிழகத்தில் சோ.ராமசாமி எழுதிய 'இரண்டு கழுதைகள்' கதை குறித்து- எனது நண்பர்கள் மூலம்- அறிந்தேன். அப்போது தான் சோ குறித்து தெரிந்து கொன்டேன். தமிழக பாஜகவிற்கு-சோ' ராமசாமி ராஜகுருவாக இருக்கிறார்.
குஜராத்தில் என்ன சாதனைகள்- செய்தார் என்று அழகாகப் பேசினார். அவரின்-பேச்சு சோவின் பேச்சை விட நன்றாக இருந்தது.

'குஜராத்தில் தடையற்ற மின்விநியோகத்தை உறுதிசெய்ய, 'ஜோதிகிராம் திட்டம்' உருவாக்கப்பட்டு நிறைவேற்றபட்டது. இதன் மூலம் தற்போது 24மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம்-நடைபெறுகிறது. குஜராத்தில் வருவது ஆர்காடு-மின்சாரம் இல்லை, அது 24 மணி நேரம் வரும் மின்சாரம்.

தேர்தல் வரும்போது எந்த வேட்பாளரை நிறுத்தவேண்டும்? எப்படி ஓட்டு சேகரிக்க-வேண்டும்? என்பதை மறந்துவிட வேண்டும். எப்பொழுதுமே-மக்களுக்கு தேவையான தொண்டுகளை செய்ய வேண்டும். அதன் மூலம், மக்கள்-இதயங்களில் இடம்பிடிக்க வேண்டும். சமுதாயத்திற்கு என்ன பயன்பாடு-என்பது குறித்து சிந்தித்து பொது தொண்டு ஆற்றினால் தேர்தல் பற்றி கவலைப்பட தேவையில்லை தேர்தலில் வெற்றி தானாக தேடிவரும்.

700நாட்களில் 1400கீமீ தூரம் குழாய் போட்டிருக்கேன். அதில் கலைஞர் குடும்பத்துடன் காரில் போகலாம்; அவ்வளவு அகலம் என்றார்.

குஜராத்தில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல்-தொழில்நுட்பத்தை முழுமையாக செயல்படுத்துவதால் லஞ்சத்தை ஒழித்திருக்கிறோம்ழூ. அனைத்து துறைகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக-இருப்பதாலும், எனதுஅறையில் இருந்து கொண்டே அனைத்தையும் கண்காணிக்க -முடிவதாலும் எங்கும் லஞ்ச, லாவண்யத்திற்கு இடமே இல்லை. மகாராஷ்டிரா-குஜராத் எல்லையில் வாகன பரிசோதனை செய்யுமிடம் (செக்-போஸ்ட்) உள்ளது. எங்களது எல்லையில் உள்ள செக்போஸ்டை 24மணி நேரமும் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிப்பதால், மகாராஷ்டிரா மாநில செக்போஸ்ட் வருமானம் 200கம்மியாக கிடைக்கிறது, என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.

'பெண்-கல்வியில் நாட்டிலேயே 20வது மாநிலமாக குஜராத் இருந்தது. தற்போது பெண் கல்வி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை 100 மூமாகியுள்ளது. பள்ளிகளிலிருந்து இடையில்படிப்பை நிறுத்தும் மாணவர்களின் விகிதம்-49 சதவீதத்தில் இருந்து 3சதவீதமாகக் குறைந்துவிட்டது. ஜூலை மாதம் 13, 14, 15 தேதிகளில் நல்ல வெயில் இருக்கும். மற்றவர்கள் சுவிஸுக்கு போகும்போது, நான் குக்கிரமத்துக்கு சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்வேன். விரைவில் 3, லிருந்து 0மூ ஆகும்,' என்றார். 2010க்குள் எல்லா கிரமத்துக்கும் அகலபட்டை வரும் என்றும் சொன்னார்.  http://www.youtube.com/watch?v=_vPnKFhIgbg&feature=player_embedded

பல நூரு கோடிக் கணக்கில் லஞ்சம்.
அனைத்து துறைகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக-இருப்பதாலும், எனதுஅறையில் இருந்து கொண்டே அனைத்தையும் கண்காணிக்க -முடிவதாலும் எங்கும் லஞ்ச, லாவண்யத்திற்கு இடமே இல்லை. என்றுக் கூறினார்.

குஜராத்தின் மீன்வளத் துறை அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி 58 நீர்நிலைகளின் மீன்பிடி உரிமைக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டதில் நேரடியாக 11 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதால் அரசுக்கு 440 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி 2008ல் குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதை உயர்நீதி மன்றம் விசாரித்து ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டு மேல்படி உரிமங்களை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரி அப்பீல் செய்தது.

மேல்படி மெகா ஊழல் நடந்திருப்பது உண்மை தான் என்பதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து அதை மூன்று மாதத்திற்குள் விசாரித்து உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில கவர்னருக்கு உச்ச நீதி மன்றம் பொறுப்பு சாட்டி மோடியின் அரசு ஊழல் செய்யும் அரசு தான், ஊழல் செய்யும் அமைச்சர்களுக்கு மோடி துணை நிற்பார் அதை நியாயப் படுத்த உச்ச நீதி மன்றத்தையும் கருப்புப் பணத்தால் விலை பேச தயங்க மாட்டார் என்பதை உலகுக்கு உணர்த்திக் காட்டி உள்ளது உச்ச நீதி மன்றம்.

இதுவல்லாமல் மோடியின் சட்டப்பேரவையில் ஆபாச காட்சிகளைப் பார்த்த இரண்டு எம்.எல்.ஏ.க்களின் ஐபேடை வாங்கிப் பார்த்து அவர்கள் பார்த்தது ஆபாச காட்சிகள் தான் என்பதை உறுதி செய்யப்பட்டு சபாநாயகரால் சஸ்பென்ட் செய்யப்ட்டனர் என்பதையும் மக்கள் அறிவர்.

அவர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கக் கோரி சட்டசபையில் தொடர்ந்து மூன்று நாட்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் சம்மந்தப்பட்ட ஐபேட்கள் தடயவியல் நிபுனர்களுக்கு அனுப்பப்பட்டு அதில் ஆபாச காட்சிகள் பார்க்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்ற அறிவிப்பை(?) அவர்களிடமிருந்து பெற்று பிரச்சனைக்கு எளிதாக முற்றுப்புள்ளி வைத்து விட்டார் மோடி. இதெல்லாம் சமீபத்திய மோடியின் சாதனைப் பட்டியல்.

இதற்கு முந்தைய 2002ல் தாமே முன்நின்று நடத்திய முஸ்லீம்களுக்கு எதிரான கொலை வெறிக்கலவம்.

தன்னை எதிர்க்கும் நிர்வாகிகளை இடம் மாற்றம் செய்வது அல்லது என்கவுன்டரில் போட்டுத் தள்ளுவது என்ற சர்வாதிகாரப் போக்கின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்லும்.

பிரதமாராகப் போகிறோம் என்ற மமதையில் களப் பணியாற்றாமல் கணவில் மூழ்கித் திளைத்ததால் இடைதேர்தலில் மண்னைக் கவ்விய கேவலமும் சமீபத்தில் நடந்தேறியது.
இவற்றை எல்லாம் மறைத்து பாராளுமன்ற பிரதமர் வேட்பாளராக நிருத்தியே ஆக வேண்டும் என்று திட்டம் தீட்டி  டைம் பத்திரிகையை விலை பேசி சிறந்த 100 தலைவர்கள் பட்டியலில் ஊழல் நாயகன் மோடியை இடம் பெறச் செய்வதற்கான சதியும் நடக்கிறது.

அண்ணா ஹசாரேவின் உண்ணா விரதத்தை குஜராத்தில் நடத்தட்டும்


பாராளுமன்ற தேர்தல் வரை அண்ணா ஹசாரே குஜராத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்வது சிறந்தது உண்மையில் அவர் ஊழலை எதிரத்துப் புறப்பட்டவராக இருந்தால் இப்போதைக்கு அவர் தனது ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை உண்ணாவிரதத்தை குஜராத்தில் மேற்கொள்ளட்டும் இல்லை என்றால் தன்னை வயதான காலத்தில் சங்பரிவார் தான காங்கிரஸூக்கெதிராக களமிறக்கி விட்டது என்பதை பகிரங்கமாக அறிவிக்கட்டும்.


ஒரு வேளை பிரதம வேட்பாளராக நிருத்தப்பட்டு விட்டால் இந்தியாவில் வெரும் இரண்டு சதவிகிதம் உள்ள சங்பரிவாரங்கள் தவிற மீதமுள்ள சகோதரத்துவமும், சகிப்புத் தன்மையும் கொண்ட மக்கள் மோடியின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு குஜராத் இடைதேர்தலில் மண்ணை கவ்வச் செய்தது போல் பாராறுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வச் செய்து விட்டால் ஒட்டு மொத்த சங் பரிவாரமும் காணாமல் மறைந்து விடும்.

இது தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்