சனி, டிசம்பர் 10, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் குஜராத் போலீசுக்கு மோடி அறிவுரை !
 


கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆச்சர்யப்பட வேண்டாம் ! கண்டிப்பாக அவ்வாறுக் கூறியது மோடி தான் வேறு யாருமில்லை.

2002ல் முஸ்லீம்கள் கொல்லப்பட்டு முஸ்லீம்களின் சடலங்கள்   குவியல் குவியலாக வீதி தோறும் குவிந்து காட்சி அளிப்பதற்கு காவி குண்டர்களுக்கு உத்தரவளித்து விட்டு அதைக் கண்டுகொள்ள வேண்டாம் என்று போலீஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டதும் இதே மோடி தான். ஆனால் அதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் அது திறைமறைவில் கூறப்பட்டது, இது திறந்த வெளியில் கூறப்பட்டது.

போலீஸை திறைமறைவில் சந்திக்கும் போது அப்படியும் திறந்த வெளியில் சந்திக்கும் போது இப்படியும் மாற்றி,மாற்றித்தான் கூறுவார் காரணம் அவர் மனிதனில் பாதியும் மிருகத்தில் பாதியுமாக (மனித மிருகமாக) இருப்பதால் இப்படித் தான் கூறுவார்.
 
குஜராத்தில் கடந்த நவம்பர் மாதம் மாநில காவல்துறை அகாடமியின் சார்பில் நடைபெற்ற காவல் துணை ஆய்வாளர்களின் அணிவகுப்பின் போது உரை நிகழ்த்துவதற்கு அழைக்கப்பட்ட மோடி மேடை ஏறியதும் அவருக்கு முன் பத்திரிகையாளர்கள் கேமராவுடன் நின்றதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டவர் போலீஸாராகிய நீங்கள் மக்கள் மத்தியில் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்.

ஆனாலும் போலீஸ் இந்த உபதேசத்தை உண்மை என்று நம்பி விட்டால் குஜராத்தில் மனிதநேயம் மலர்ந்து விட்டால் முதலில் கம்பி எண்ணுவது நாமாகத் தான் இருக்கும் என்பதை சட்டென உணர்ந்தவர் சுதாரித்துக்கொண்டு அதற்கடுத்து நாட்டில் பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்ட நிலையை மக்களிடத்தில் போலீஸார் தெளிவுப்படுத்தி ஒருமித்தக் கருத்தை ஏற்படுத்த பாடுபட வேண்டும் என்று சேர்த்துக்கூறி உரையை முடித்து விட்டார். 

இர்ஷத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டது போலி எண்கவுன்டர் தான் என்று சிறப்பு புலணாய்வுக் குழுவினர் தகுந்த ஆதாரத்துடன் கூறிவிட்டதால் குஜராத் போலீஸ் அதை எதிர்த்து அறவே வாய் திறக்காதது கண்டு அவருக்கு தீராத வருத்தமாக இருந்து வந்தது அதனால் இனிவரும் காலங்களில் அதேப்போன்ற அப்பாவிகளை கொல்ல நேரிட்டால் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் தான், நக்ஸலைட்டுகள் தான் அவர்கள் கொல்லப்பட்டது சரிதான் அது என்கவுன்டர் தான் என்றக் கருத்தை மக்கள் மத்தியில் ஆழமாக விதைப்பதற்கு மற்ற அரசுத் துறைகளை விட போலீஸாராகிய நீங்களே சரியானவர்கள் என்பதை சூசகமாகக்கூறி முடித்தார் (தனியாகவும் அழைத்து சொல்வார்).

ஆனாலும் கேமராவுடன் நின்றிருந்த காவி பத்திரிகையாளர்கள் கொட்டை எழுத்துகளில் போலீஸாரை மனித நேயத்துடன் நடந்த கொள்ளும்படி மோடி வலியுருத்தினார் (2002 கலவரங்கள் தொட்டு சொரப்தீன், இர்ஷத் ஜஹான் உள்ளிட்ட போலி என்கவுன்டர் வரை மோடிக்கு சம்மந்தமில்லை போலீஸாரே அதற்கெல்லாம் காரணம் எனும் தொணியில் ) எழுதி தள்ளி விட்டனர்.

என்ன தான் சங்பரிவார பத்திரிகைகள் மோடியை மனித வர்க்கத்தை சேர்ந்தவராக காட்ட முயன்றாலும் உலக அரங்கில் அவர் மனித மாமிசம் உண்ணும் கழுகாகவே காட்சி அளித்து வருவதைக் கண்டு மேல்படி பத்திரிகையாளர்களே கலக்கத்துடன் இருந்து வருகின்றனர்.
 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்